சந்திரமுகி 2 படப்பிடிப்பின் போது ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நடிகர் வடிவேவிற்கும் பி.வாசுவிற்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக வெளிவந்த தகவலுக்கு தற்போது பதில் கிடைத்துள்ளது.

கவர்ந்த சந்திரமுகி

பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா, பிரபு, வடிவேலு, நயன்தாரா உள்ளிட்ட பலரும் நடித்து சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் சந்திரமுகி. இந்த படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கி வருகிறார் பி.வாசு. சந்திரமுகி 2 படத்தில் லாரன்ஸ், கங்கனா ரானாவத், வடிவேலு, ராதிகா, லட்சுமி மேனன், மஹிமா நம்பியார் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரித்து வருகின்றது.

முக்கியமான ஒன்று

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான சந்திரமுகி திரைப்படம் சூப்பர்ஹிட் ஆனதால், பாகம் இரண்டின் மீது உள்ள எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது. சந்திரமுகி படத்தில்ீடம்பெற்ற அனைத்து பாடல்களும் வேற லெவல் ஹிட் ஆனது. குறிப்பாக “ரா ரா, கொக்கு பரபர,” போன்ற பாடல்கள் படத்திற்கு பக்க பலமாக அமைந்தது. அதுமட்டும் இல்லாமல் வடிவேலுவின் காமெடி இன்று பார்த்தாலும் சிரித்து சிரித்து வயிறு வலிப்பது நிச்சயம். அந்த அளவிற்கு படத்தின் வெற்றிக்கு வடிவேலுவின் காமெடியும் முக்கியமான ஒன்றாக அமைந்தது. அதேபோல் சந்திரமுகி 2 படத்திலும் வடிவேலு இணைந்திருப்பது ரசிகர்களுக்கு சந்தோசத்தை கொடுத்துள்ளது. சமீபத்தில் கூட வடிவேலு, லாரன்ஸ் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது.

பிரச்சனை இல்லை

வடிவேலு மற்றும் பி. வாசுவிற்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக மோதல் ஏற்பட்டதாக சில நாட்களுக்கு முன்பு தகவல் பரவியது. ஆனால் அந்த தகவல் வதந்தி என்று சமூக வலைதளத்தில் தற்போது செய்தி பரவி வருகிறது. அது மட்டும் இல்லாமல் மைசூர், ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வடிவேலு சம்பந்தப்பட்ட பட காட்சிகள் அனைத்தும் படமாக்கப்பட்டு முடித்துவிட்டதாகவும் கூறப்படுகின்றது. மேலும் இப்படத்தில் சூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கி இருப்பதாகவும் கூறுகின்றனர். கூடிய விரைவில் சந்திரமுகி இரண்டாம் பாகத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here