நடிகர் அஜித்தின் தந்தை மறைவுக்கு நடிகர்கள் சூர்யா, கார்த்திாகியோர் நேரில் சென்று ஆறுதல் கூறியுள்ளனர்.

தந்தை மறைவு

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்பிரமணியன் கடந்த 24ஆம் தேதி அதிகாலை காலமானார். பக்கவாதம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த சுப்பிரமணியன் கடந்த 4 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித்தின் தந்தை உயிரிழந்த சில மணி நேரங்களிலேயே அவரது உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.

நேரில் ஆறுதல்

அஜித்தின் தந்தை மறைவு செய்தியை கேட்டு சினிமா பிரபலங்களும், ரசிகர்களும் பேரதிர்ச்சியில் ஆழ்ந்தனர். மேலும் நடிகர்கள் கமலஹாசன், விக்ரம், சிம்பு உள்ளிட்ட பலரும் அஜித்தின் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்து இருந்தனர். பல அரசியல் தலைவர்களும் தங்களது இரங்கல்களை சமூக வலைதளத்தின் மூலம் பதிவிட்டிருந்தனர். இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று அவரது தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர். சூர்யா மற்றும் கார்த்தி ஒரே காரில் அஜித் வீட்டிற்கு நேரில் சென்று தந்தை இழப்பால் வாடும் அஜித்துக்கு ஆறுதலையும் கூறி உள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது.

நேரில் அஞ்சலி

அஜித் தந்தையின் அஸ்தி சென்னை ஈசிஆர் கடற்கரையில் கரைக்கப்பட்டதாக அவரது அண்ணன் அனில்குமார் நேற்று டுவிட் மூலம் அறிவித்திருந்தார். அஜித்தின் தந்தை மறைவுக்கு விஜய், சூர்யா, கார்த்தி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்து இருப்பது ரசிகர்களிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அஜித் மற்றும் விஜய் இருவரும் விரோதிகள் போல் நினைத்து சமூக வலைதளத்தில் சண்டை போட்டு வரும் நெட்டிசனுக்கு மத்தியில் அஜித்தின் தந்தை மறைவுக்கு விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here