ஏப்ரல் மாதத்தில் வெளியாக போகும் பொன்னியின் செல்வன் 2 மற்றும் சாகுந்தலம் படங்களில் வெல்லப்போவது திரிஷாவா? இல்லை சமந்தாவா? என்று ரசிகர்கள் கணக்குப்போட துவங்கிவிட்டனர்.

மிரட்டும் குந்தவை

மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா, ஜெயராம், ஐஸ்வர்யா லட்சுமி, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, பிரகாஷ்ராஜ், ரஹ்மான், பார்த்திபன் உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்து வெளியான திரைப்படம் பொன்னியின் செல்வன் 1. மெட்ராஸ் டாக்கீஸ் லைகா ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.ரகுமான் இசையில் உருவான இப்படம் சூப்பர்ஹிட் படமாக அமைந்தது. PS 1 கிட்டத்தட்ட ரூ.500 கோடிகளுக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்குவதில் இயக்குநர் மணிரத்னம் படு பிஸியாக இருந்து வருகிறார். பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியிடப் போவதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம்

இதில் குந்தவை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் டிரிஷாவின் மேக்கப் மற்றும் காஸ்ட்யூம்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தில் குந்தவையின் கதாபாத்திரம் அதிக முக்கியத்துவம் இருக்கும் என்றும் கூறப்படுகின்றது. அதனால் திரிஷாவின் காஸ்ட்யூம்சில் மணிரத்தினம் அதிகமாக மெனக்கெட்டு உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது.

வெல்லப்போவது யார்?

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க, நடிகை சமந்தா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வெளியாக இருக்கும் சாகுந்தலம் திரைப்படமும் ரசிகர்கள் மத்தியில் அதிக ஆவலை தூண்டி உள்ளது. மேலும் இதுவும் சரித்திர படமாக இருப்பதுடன், சாகுந்தலை கதாபாத்திரத்தில் சமந்தா நடித்திருப்பதால் இந்த படம் குறித்த எதிர்பார்ப்பும் அதிகளவில் நிலவி வருகிறது. இந்த படம் ஏப்ரல் 14ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில், பொன்னின் செல்வன் திரைப்படம் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் யாருடைய மேக்கப், காஸ்ட்யூம்ஸ், நடிப்பு ரசிகர்களை கவர போகிறது என்று இப்பொழுதே கணக்குக்போட தொடங்கிவிட்டனர். எது எப்படியாக இருந்தாலும் அவரவருக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை கண்டிப்பாக தங்களது நடிப்பால் மிரட்டுவார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here