ஆன்மீக கதையில் நடிக்க நடிகை மீனா ஓகே சொன்னதாக தகவல் வெளிவந்துள்ளது.

மீண்டு வரும் மீனா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை மீனா, அன்புள்ள ரஜினிகாந்த் என்ற படத்தில் ரஜினிகாந்துடன் நடித்து மிகவும் பிரபலமானார். திரையுலக பயணத்தில் 40 ஆண்டுகளை கடந்த நடிகை மீனாவுக்கு சமீபத்தில் சென்னையில் பிரமாண்டமாக “மீனா 40” என்ற பெயரில் நிகழ்ச்சி கொண்டாடப்பட்டது. இதில் முன்னணி நடிகர்கள் பலரும் கலந்துகொண்டனர். 1990 ஆம் ஆண்டுகளில் இருந்து நாயகியாக நடிக்க துவங்கிய மீனா, ராஜ்கிரண்னுடன் என் ராசாவின் மனசிலே படத்தில் தனது அபாரமான நடிப்பை வெளிப்படுத்தினார். கடந்த ஆண்டு இவரது நடிப்பில் திரிஷ்யம் 2, அண்ணாத்த, ப்ரோ டாடி உள்ளிட்ட படங்கள் வெளியானது.

ஆன்மீக கதை

2009 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்ட மீனா, திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சினிமாவில் நடித்து வந்தார். இந்நிலையில் மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஆண்டு நுரையீரல் பாதிக்கப்பட்ட காரணத்தால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். தற்போது அந்த துயரத்தில் இருந்து மீண்டு வரும் நடிகை மீனா, தனது தோழிகளுடன் நேரத்தை செலவழித்து வருகிறார். இந்நிலையில் சினிமாவில் நடிக்க கதைகளை கேட்டு வருவதாகவும் கூறுகின்றனர். மேலும் இயக்குநர் ஒருவர் கூறிய ஆன்மீக கதை, மீனாவுக்கு பிடித்துள்ளதாகவும், அப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாகவும் கூறுகின்றனர். பழனி முருகனை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இந்த படம் குறித்து கூடுதல் தகவல் விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here