ரோஜா தொடர் மூலம் பிரபலமான நடிகை பிரியங்கா நல்காரி மலேசியாவில் உள்ள விநாயகர் கோவிலில் திடீரென்று திருமணம் செய்து கொண்டார்.

ரோஜா வெற்றி

சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமானவர் நடிகை பிரியங்கா நல்காரி. தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சீதாராமன் தொடரிலும் சீதா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் ரோஜா தொடரில் நடிக்கும் பொழுதே பல ரசிகர்களைப் பெற்றார். ரோஜா தொடரில் ஹீரோ ஹீரோயின் கெமிஸ்ட்ரி நன்றாக இருந்ததால் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதேபோல் தற்போது சீதாராமன் தொடருக்கும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. சமீபத்தில் தான் இந்த தொடர் தொடங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

கோவிலில் திருமணம்

இந்நிலையில் தனக்கு திருமணமான தகவலை இன்ஸ்டா பக்கத்தில் புகைப்படம் மூலம் வெளியிட்டுள்ளார் நடிகை பிரியங்கா நல்காரி. சிம்பிளாக விநாயகர் கோவிலில் நடத்தப்பட்ட இந்த திருமண புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், இவருக்கு வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். “After lots of struggle” என்ற ஹேஷ்டேக் போடப்பட்டுள்ளதால் இது காதல் திருமணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது. மாலையும் கழுத்துமாக கணவன் மனைவியாக கோவிலை சுற்றி வரும் புகைப்படம், ஒருவருக்கொருவர் மாலை மாற்றும் புகைப்படம் என்று அனைத்து புகைப்படத்திலும் இவர்கள் இருவர் மட்டுமே இருப்பதால் ஒருவேளை பெற்றோர் சம்மதம் இல்லாமல் திருமணம் நடந்துள்ளதா? என்று பலரும் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். பிரியங்காவின் கணவர் பெயர் ராகுல். இவர் ஏற்கனவே சீரியல்களிலும், படங்களிலும் நடித்துள்ளார். நிரந்தர வேலைக்காக மலேசியாவுக்கு சென்றுவிட்டார் ராகுல். இதனால் பிரியங்காவும் மலேசியாவுக்கு சென்றுவிட்டதாக கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here