இனி காமெடியனாக நடிக்காமல் ஹீரோவாக மட்டுமே நடிப்பேன் என்று நடிகர் சூரி கூறியுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஹீரோவாக அறிமுகம்

ஆரம்ப காலத்தில் சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகர் சூரி, பரோட்டா காமெடிக்கு பிறகு பரோட்டா சூரி என்று சொல்லும் அளவிற்கு பிரபலம் ஆகிவிட்டார். அந்த ஒரு காமெடி மூலம் டாப் காமெடியன்கள் லிஸ்டில் இடம் பிடித்தார் சூரி. வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன், சரவணன் இருக்க பயமேன், அண்ணாத்த, உடன்பிறப்பே, சங்கத்தமிழன், நம்ம வீட்டு பிள்ளை, டான் என்று பல படங்களில் காமெடியில் கலக்கி வந்த சூரி, தற்போது விடுதலை படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகியுள்ளார். இந்த திரைப்படம் மார்ச் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படத்தின் டிரெய்லர் சில தினங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல விமர்சனத்தை பெற்றது.

ஒன்லி ஹீரோ

காமெடியனாக இருக்கும் சமயத்திலேயே தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்து சிக்ஸ் பேக் வைத்து மிரட்டினார் சூரி. எங்கே சூட்டிங் சென்றாலும் அந்த இடத்திலிருந்து தீவிர உடற்பயிற்சி செய்து அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியீட்டு விடுவார். அப்படி சிக்ஸ் பேக் வைத்து போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் மிரட்டியுள்ள விடுதலை திரைப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை தூண்டியுள்ளது. படம் வெளிவர இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில் இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இது மட்டும் இல்லாமல் இந்த படத்தை தொடர்ந்து இவருக்கு ஹீரோவாக நடிக்கும் வாய்ப்பும் குவிந்து வருகிறதாம். தற்போது சிவகார்த்திகேயன் தயாரிப்பில் கொட்டுக்காளி என்ற படத்தில் ஹீரோவாக நடிக்கிறார் சூரி. இதைதொடர்ந்து அருண் விஷ்வா இயக்கத்தில் ஒரு படமும், காக்கிச்சட்டை பட இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் படத்திலும் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இனிமே காமெடியனாக நடிக்கப் போவதில்லை என்றும் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்றும் சூரி கூறியதாகவும் கூறப்படுகின்றது. இதேபோல் தான் நடிகர் சந்தானமும் கூறியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here