மற்ற பாடகர்கள் பாடிய பாடலை பாடும்பொழுது ரசிக்கும் ரசிகர்கள் தான் நேரடியாக பாடும் பாடல்களை ஏன் ரசிப்பதில்லை என தனக்கு பலமுறை தோன்றியுள்ளது என்று பின்னணி பாடகி பிரியங்கா கூறியுள்ளார்.

வருத்தத்தில் பிரியங்கா

விஜய் டிவியின் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் பாடகி பிரியங்கா. குழந்தை நட்சத்திரமாக சூப்பர் சிங்கரில் அறிமுகமான இவர் பல படங்களிலும், மேடை கச்சேரிகளிலும் பாடி வருகிறார். பல் மருத்துவரான இவர், பொது சேவையும் செய்து வருகிறார். இந்நிலையில் அவர் பாடிய பாடல்கள் எதுவுமே பிரபலமாகவில்லை என்று வருத்தத்தில் உள்ளார் பிரியங்கா. சமீபத்தில் பாடகி பிரியங்கா இணையதளம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், பல சுவாரஸ்யமான விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில். “இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் பிசாசு 2 படத்தில் பாடி இருக்கிறேன். பாடல்கள் இன்னும் வெளியாகவில்லை. அப்பா, அம்மா இருவருமே இசைத்துறையில் இருந்ததால் சின்ன வயதில் இருந்தே இசை மீது எனக்கும் ஆர்வம் அதிகமாக இருந்தது. பாடகியாக வேண்டுமென்ற எண்ணம் சூப்பர் சிங்கரில் பங்கேற்ற பிறகுதான் எனக்கு தோன்றியது. ஆறு வயதில் இருந்தே கர்நாட்டிக் சங்கீதத்தை கற்றுக் கொண்டேன்.

அடையாளம் வேண்டும்

சூப்பர் சிங்கர் முடிந்த பிறகு இயக்குநர் பாலாவின் அவன் இவன் படத்தில் பாடினேன். ஆனால் அந்தப் பாடல் படத்தில் இடம்பெறவில்லை. நாச்சியார் படத்திலும் பாடினேன். மற்ற பாடகர்கள் பாடிய பாடலை நான் பாடும் பொழுது அனைவரும் ரசிக்கிறார்கள். ஆனால் நானே நேரடியாக பாடும் பொழுது அந்த பாடல்கள் பிரபலமாகவில்லை என்று எனக்கு பலமுறை தோன்றியுள்ளது. இது என்னுடைய பாடல் என்ற அடையாளம் எனக்கு கிடைக்க வேண்டும். அந்த ஆசை எனக்கு இருக்கிறது. அதற்கான நேரம் வரும் வரை நான் காத்திருப்பேன். எஸ்பிபி சாருடன் நான் மேடையில் பாடும்போது பதட்டமாக இருந்தேன். என்னை இயல்பு நிலைக்கு கொண்டு வந்து என்னை அவர் பாட வைத்தார்” என்று தனது அனுபவத்தை பாடகி பிரியங்கா பகிர்ந்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here