நடிகை மாளவிகா மோகனன் தெலுங்கில் இரண்டாவது ஹீரோயினாக நடிப்பதாக வந்த தகவலுக்கு விளக்கம் கொடுத்துள்ளார்.

விக்ரம் படத்தில் மாளவிகா

பேட்ட படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடம் அறிமுகமான நடிகை மாளவிகா மோகனன், அதனைதொடர்ந்து மாஸ்டர், மாறன் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் கிறிஸ்டி என்ற மலையாள படத்தில் நடித்திருந்த அவர், தற்போது தங்கலான் படத்தில் நடித்து வருகிறார். ஸ்டுடியோ கிரீன் மற்றும் நீலம் ப்ரொடக்ஷன் சார்பில் கே.இ. ஞானவேல் ராஜா தயாரிக்கும் இந்த படத்தில் சீயான் விக்ரம், பார்வதி, பசுபதி உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கும் இந்த படத்தின் போஸ்டர்களும், விக்ரமின் வித்தியாசமான கெட்டப்பில் பல புகைப்படங்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அது மட்டும் இல்லாமல் ஹிந்தியில் ருத்ரா என்ற படத்திலும் நடித்து வருகிறார் மாளவிகா மோகனன்.

எல்லாம் வதந்தி

இந்நிலையில் பவன் கல்யாணுடன் இணைந்து ‘உஸ்தாத் பகத்’ என்ற தெலுங்கு படத்தில் மாளவிகா மோகனன் நடிப்பதாகவும் தகவல் பரவியது. அது மட்டும் இல்லாமல் அந்த படம் இரண்டு ஹீரோயின் சப்ஜெக்ட் எனவும், அதில் இரண்டாவது நாயகியாக மாளவிகா மோகனன் நடிப்பதாகவும் வதந்திகள் வெளியானது. இந்த தகவல்களை கேள்விப்பட்ட மாளவிகா மோகனன், செம கடுப்பில் உள்ளார். மேலும் தனது சார்பில் விளக்கத்தையும் அவர் கொடுத்துள்ளார்.

சேனா கடுப்பில் மாளவிகா

இதுதொடர்பாக டுவிட்டர் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில்; “நான் பவன் கல்யாண் மீது மரியாதை வைத்து இருக்கிறேன். ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துகிறேன். பவன் கல்யாணின் படத்தில் நான் நடிக்கவில்லை. அதே சமயம் இன்னொரு தெலுங்கு படத்தில் நடிப்பது உண்மைதான். அதில் 2 ஹீரோயின்கள் நடிப்பதும் உண்மை தான். ஆனால், நான் 2வது ஹீரோயின் கிடையாது. நான் தான் முதன்மை ஹீரோயின். இது புரளி கிளப்புபவர்கள் தெரிந்து கொள்ளட்டும்” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here