நகை கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்ட போட்டோ ஷூட்டில் தேவதை போல் ஜொலிக்கும் நயன்தாராவின் புகைப்படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

வேலையில் பிஸி

தமிழில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா தற்போது பாலிவுட்டிலும் என்ட்ரி கொடுத்துள்ளார். ஷாருக்கானுக்கு ஜோடியாக “ஜவான்” படத்தில் நடித்து வரும் அவர், தனி ஒருவன் படத்திற்கு பிறகு ஜெயம் ரவிக்கு ஜோடியாக “இறைவன்” படத்தில் நடித்திருக்கிறார். தனி ஒருவன் படம் சூப்பர்ஹிட் ஆனதால் இந்த படமும் மிகப்பெரிய ஹிட் ஆகும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். தற்போது அடுத்தடுத்து கதைகளை கேட்டு வரும் நயன்தாரா, ராகவா லாரன்ஸுக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கப் போவதாகவும் அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு பிறகு குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருந்து வந்த நயன்தாரா, தற்போது மீண்டும் நடிப்பில் ஃபுல் ஃபார்மில் இறங்கியுள்ளார். அதேபோல் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் அஜித்தை வைத்து இயக்கப் போவதாக தகவல் வந்தது. ஆனால் அந்த படத்தை கைவிட்ட பிறகு இயக்குநர் மற்றும் நடிகருமான பிரதீப் ரங்கநாதனை வைத்து படம் இயக்கப்போவதாக தகவல் வந்துள்ளது. அந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நயன்தாரா நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். ஆனால் இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் இன்னும் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஜொலிக்கும் நயன்

அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கும் இவர்கள் அடுத்து என்ன தகவலை வெளியிடப் போகிறார்கள் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு, நயன்தாராவின் ஜொலிக்கும் புகைப்படங்கள் வரப்பிரசாதமாகவே அமைந்துள்ளது. தங்க வைர நகைகள் அணிந்து ஃபோட்டோ ஷூட் நடத்தியுள்ளார் நயன்தாரா. இந்தப் புகைப்படங்கள் அனைத்தும் நகைக்கடை விளம்பரத்திற்காக எடுக்கப்பட்டதாம். ஏற்கனவே பல நகைக்கடை விளம்பரங்களில் நடிகை நயன்தாரா நடித்திருந்தாலும், தற்போது வெளிவந்துள்ள புகைப்படத்தில் தனி ஸ்டைலாகவும், தேவதை போல மின்னுகிறார் என்றும் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here