விஜய் டிவியில் 2008ல் ஒளிபரப்பாகி ரசிகர்களிடம் பேராதரவு பெற்ற “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சி மீண்டும் ஒளிபரப்பாக உள்ளது.

தமிழ் ஆர்வம்

தமிழர்களுக்கு தமிழ் ஒரு மொழியாக மட்டும் இல்லாமல் வாழ்க்கையாகவும், தனது அடையாளமாகவும் இருந்து வருகிறது. இந்நிலையில் விஜய் டிவி நிறுவனம் தமிழை மையப்படுத்தி நிகழ்ச்சியை ஒளிபரப்ப உள்ளது. அது தான் “தமிழ் பேச்சு எங்கள் மூச்சு” நிகழ்ச்சி. ஏற்கனவே 2008 ஆம் ஆண்டு ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது மீண்டும் அந்த நிகழ்ச்சி தொடங்க உள்ளது. தமிழகத்தின் சிறந்த பேச்சாளரை உருவாக்கும் விதமாக இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. தமிழ் தொலைக்காட்சி வரலாற்றிலேயே இதுபோல் தமிழுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும் நிகழ்ச்சியை படைப்பது இதுதான் முதல் முறை.

தமிழின் பெருமை

தகுதிச்சுற்று, தமிழ் எழுத்து, வார்த்தை, வாக்கியம் என்ற அடிப்படையில் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடந்த சீசன் ரசிகர்களுடைய நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அதற்கான இரண்டாம் சீசனின் ப்ரோமோ விஜய் டிவி நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தோன்றி தமிழின் பெருமையை கூறும் விதமாக இந்த ப்ரோமோ உருவாக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக இந்த சீசனும் கடந்த சீசனைப் போலவே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here