விக்னேஷ் சிவன் இயக்ககும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்க உள்ளதாகவும், அதில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

பல மொழிகளில் தயாரிப்பு

இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவின் காதல் கதை அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவர்களது திருமணத்திற்கு பிறகு, வாடகை தாய் மூலம் இரு குழந்தைகளுக்கு தாயானார் நயன்தாரா. ஏற்கனவே இயக்குநர் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வந்தனர். அதன்மூலம் நெற்றிக்கண், கூழாங்கல், காத்து வாக்குல ரெண்டு காதல் உள்ளிட்ட படங்களை தயாரித்த இவர்கள், தற்போது “சுப் யாத்ரா” என்ற குஜராத்தி படத்தையும் தயாரித்து உள்ளனர். இந்தப் படம் வரும் ஏப்ரல் 28ம் தேதி ரிலீசாகவுள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப்

சமீபத்தில் ஏகே 62 படத்தை விக்னேஷ் சிவன் இயக்க இருப்பதாக தகவல் வெளிவந்த நிலையில், அந்த படத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார். ஆனால் நயன்தாராவோ ஜவான் மற்றும் இறைவன் உள்ளிட்ட படங்களில் நடிப்பதில் பிஸியாக இருந்து வருகிறார். இந்நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கும் படத்தில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க இருப்பதாகவும், நடிகை நயன்தாரா முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இந்த படம் குறித்து அதிகாரபூர்வ தகவல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here