ஆஸ்கர் விருது வென்ற “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கொன்சால்வெஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

ஆஸ்கர் விருது

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரானது ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம். முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியினர், தாயை பிரிந்துவரும் குட்டி யானைகளைளை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதே அந்த ஆவணப்படத்தின் கதை. பொம்மன், பெள்ளி தம்பதியரே அதில் நடித்த்திருந்தனர். கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கிய “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வென்றது. “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை சமீபத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார். அத்துடன் சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி அவர், ரூ.1 லட்சம் பரிசளித்தார்.

ரூ.1 கோடி பரிசு

இந்நிலையில், ஆஸ்கர் விருது வென்ற “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தின் இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ், சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். இந்த சந்திப்பின் போது ஆஸ்கர் விருதை முதலமைச்சரிடம் காண்பித்து அவர் மகிழ்ச்சியடைந்தார். அப்போது இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ்க்கு ரூ.1 கோடி பரிசுத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கி முதலமைச்சர் கௌரவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஆஸ்கர் விருதை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து சேர்த்தது மிகவும் பெருமையாக உள்ளதாக தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here