தனது கிராமத்திற்கு சென்றுள்ள நடிகை ஸ்ரீ திவ்யா அங்கு எடுத்த புகைப்படங்களை இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார்.

முதல் படத்திலேயே விருது

திரைத்துறையில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான நடிகை ஸ்ரீதிவ்யா, “வருத்தப்படாத வாலிபர் சங்கம்” என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆனார். தனது எதார்த்தமான நடிப்பால் முதல் படத்திலேயே சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை வென்றார். அதன்பிறகு வெள்ளக்கார துரை, காக்கிச்சட்டை உள்ளிட்ட படங்களிலும் நடித்தார். தற்போது தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.

கோரிக்கை வைக்கும் ரசிகர்கள்

ஸ்ரீதிவ்யா நடிப்பில் வெளியான ஈட்டி, பெங்களூர் நாட்கள் உள்ளிட்ட படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. 2002 ஆம் ஆண்டு ஜன கன மன என்ற மலையாள படத்தில் கடைசியாக நடித்த பிறகு ஸ்ரீதிவ்யாவுக்கு ஏற்ற கதாபாத்திரங்கள் தற்போது சினிமாவில் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். தனக்கு ஏற்ற கதைகளை மட்டும் கேட்டு தேர்வு செய்து நடித்து வரும் நடிகை ஸ்ரீதிவ்யா, தற்போது மஃப்சல், ரைடு உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். அடிக்கடி தனது கிராமத்திற்குச் சென்று அங்கு எடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டு வரும் நடிகை ஸ்ரீதிவ்யா, சமீபத்தில் தன் கிராமத்திற்கு சென்று அங்கு இருக்கும் இயற்கை காட்சிகளை புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு உள்ளார். இந்த புகைப்படங்கள் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. எல்லா படங்களிலும் க்யூட்டாக இருக்கும் ஸ்ரீதிவ்யா பல படங்களில் நடிக்க வேண்டும் என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here