தனது 70வது பிறந்தநாளை வெளிநாட்டு மருமகளுடன் கொண்டாடிய எதிர்நீச்சல் சத்யபிரியாவின் குடும்ப புகைப்படம் சமூகவலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

பிரபல தொடர்

தொலைக்காட்சிகளில் டாப்பாக இருக்கக்கூடிய சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் ரசிகர்களை கவர்ந்து வருகின்றது. அந்த வகையில் எதிர்நீச்சல் என்ற தொடர் ரசிகர்கள் பட்டாளத்தையே உருவாக்கி வைத்துள்ளது. தினம் தினம் திருப்பங்களுடன் ஒளிபரப்பாகும் இந்த தொடர், இல்லத்தரசிகளை மட்டும் இல்லாமல் அனைவரையும் கவர்ந்து வருகிறது. இந்த தொடரில் முதன்மை கதாபாத்திரத்தில் ஜனனி, ரேணுகா, நந்தினி, ஈஸ்வரி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர்.

வெளிநாட்டு மருமகள்

தற்போது எதிர்நீச்சல் தொடரில் நடித்து அவரும் சத்யப்ரியா, கிட்டத்தட்ட 350 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். அதில் 50 படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். 2000 ஆம் ஆண்டு புன்னகை என்ற தொடரின் மூலம் தமிழ் சீரியல்களில் நடிக்க துவங்கிய நடிகை சத்யப்ரியா கோலங்கள் தொடர் மூலம் மிகவும் பிரபலமானார். இதயம், முத்தாரம், வம்சம், அவளும் நானும், கல்யாண பரிசு, மகாலட்சுமி, நீதானே என் பொன்வசந்தம் உள்ளிட்ட பல தொடர்களிலும் இவர் நடித்துள்ளார். தற்போது எதிர்நீச்சல் என்ற தொடரில் விசாலாட்சி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் சத்யப்ரியாவின் குடும்ப புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சமீபத்தில் 70வது பிறந்தநாளையொட்டி சத்யப்ரியாவுக்கு பீமரத சாந்தி (Bima ratha santhi) கொண்டாடப்பட்டது. அப்போது எடுத்துக்கொண்ட குடும்ப புகைப்படம் தற்போது பகிரப்பட்டு வருகிறது. தனது சினிமா பயணம் குறித்த பேட்டி ஒன்றில் தனது குடும்பம் குறித்தும் கூறி இருக்கின்றார் சத்யப்ரியா. மேலும் தனது மருமகள் வெளிநாட்டை சேர்ந்தவர் எனவும் கூறி இருப்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here