வீட்டு லாக்கரில் இருந்த தங்க, வைர நகைகள் திருடுப் போனதாக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தனியாக வசிக்கும் ஐஸ்வர்யா

ரஜினிகாந்தின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்துகொண்டார். பிறகு கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்துவிட்டனர். தற்போது தனுஷை விட்டு பிரிந்து இருக்கும் ஐஸ்வர்யா, தனது இரு மகன்களுடன் தனியாக தேனாம்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார்.

திருட்டு போன நகைகள்

இந்நிலையில் ஐஸ்வர்யா தனது வீட்டு லாக்கரில் இருந்த சுமார் 60 சவரன் தங்க நகைகள் மற்றும் வைர நகைகள், நவரத்தின கற்களை காணவில்லை என்று தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் கூறியுள்ளதாவது; நகைகள் அனைத்தும் தனது திருமணத்திற்காக வாங்கப்பட்ட நகைகள் என்றும் கடந்த 18 ஆண்டுகளாக பாதுகாத்து வைத்திருந்தது காணாமல் போனதாகவும் கூறியுள்ளார். கடைசியாக தனது தங்கை சௌந்தர்யாவின் திருமணத்தில் பயன்படுத்திவிட்டு மீண்டும் லாக்கரில் வைத்த பின் திறந்துகூட பார்க்கவில்லை என்றும் 3 முறை வீடு மாறிய பிறகும் லாக்கரை திறக்கவில்லை என்றும் கூறியுள்ளார். லாக்கரில் நகைகள் இருப்பது வேலையாட்களுக்கு தெரியும் என்றும் ஐஸ்வர்யா குறிப்பிட்டிருகிறார். இவரது புகார் மனுவை ஏற்ற போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here