ஆக்ஷன் திரில்லராக உருவாகி வரும் சைரன் படத்தில் நடிகர் ஜெயம் ரவி ஜெய்லராக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அடுத்தடுத்து படங்கள்

நடிகர் ஜெயம் ரவி தற்போது இயக்குநர் அஹமது இயக்கத்தில் உருவாகி வரும் இறைவன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகின்றது. இந்த படத்தை தொடர்ந்து இவரது நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் வெளிவர தயாராக உள்ளது. இயக்குநர் மணிரத்தினம் இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான அகிலன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.

ஜெய்லராக ஜெயம் ரவி

கடைசியாக ஜெயம் ரவி நடிப்பில் வெளியான பொன்னியின் செல்வன் 1 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், அந்த படத்தின் இரண்டாம் பாகத்திற்கும் எதிர்பார்ப்புகள் அதிகரித்து வருகிறது. இறைவன், PS-2 என அடுத்தடுத்து படங்களில் ஜெயம் ரவி பிஸியாக இருக்கிறார். ஏப்ரல் 28 பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் வெளிவர இருப்பதால் ஜெயம் ரவி ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருக்கின்றனர். அதுமட்டுமில்லாமல் தற்போது இவர் நடித்து வரும் இறைவன் திரைப்படமும் விரைவில் ரிலீஸ் ஆகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. தற்போது ஜெயம் ரவி சைரன் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார். கீர்த்தி சுரேஷ், அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலரும் இந்த படத்தில் நடித்து வருகின்றனர். ஆக்ஷன் கிரைம் த்ரில்லராக உருவாகி வரும் இந்தப்படத்தில் ஜெய்லராக ஜெயம் ரவி நடிக்கிறார். சைரன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கூடுதல் அப்டேடை படக்குழு விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here