என்னுடைய திரை வாழ்க்கைக்கு கண்ணை நம்பாதே முக்கியமான படமாக இருக்கும் என்று நடிகை ஆத்மீகா கூறியுள்ளார்.

கிரைம் திரில்லர்

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகைகள் லிஸ்டில் இருப்பவர் நடிகை ஆத்மிகா. இவர் நடிப்பில் வெளியான மீசைய முறுக்கு, நரகாசுரன், கோடியில் ஒருவன், காட்டேரி உள்ளிட்ட திரைப்படங்கள் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில் உதயநிதியுடன் இணைந்து “கண்ணை நம்பாதே” என்ற படத்தில் நடித்துள்ளார். கிரைம் திரில்லர் படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னா, ஸ்ரீகாந்த், பூமிகா, மாரிமுத்து மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை இயக்கியுள்ளார் மாறன். இரவுக்கு ஆயிரம் கண்கள் படத்திற்கு பிறகு இவர் இயக்கிய படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முக்கியமான படம்

கண்ணை நம்பாதே படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகை ஆத்மிகா பகிர்ந்துள்ளார். அவர் கூறுகையில், “ஒவ்வொரு நடிகைக்கும் தனது திறமையை நிரூபிக்கும் கதாபாத்திரம் கிடைக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். அப்படிப்பட்ட கதாபாத்திரம் எனக்கு கிடைத்துள்ள படம் தான் கண்ணை நம்பாதே. என்னுடைய திரை வாழ்க்கைக்கு இது முக்கியமான படமாக இருக்கும். இந்த கதையை கேட்கும்போதே நான் கதாபாத்திரத்தோடு இணைந்துவிட்டேன். ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு பிறகு முழு படத்தையும் தியேட்டரில் பார்ப்பது போல் இருந்தது. மேலும் உதயநிதியுடன் நடித்தது எனக்கு சிறப்பான அனுபவம். இந்த படத்தில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நானும் ஒரு பகுதியாக இருப்பது மகிழ்ச்சி கொடுக்கின்றது” என்று அவர் கூறியுள்ளார். இன்று (மார்ச் 17) திரையரங்குகளில் வெளியான கண்ணை நம்பாதே திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here