“தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” குறும்படத்தில் நடித்த தம்பதிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துடன் ரூ.1 லட்சம் பரிசும் வழங்கியுள்ளார்.

ஆஸ்கர் விருது

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தயாரானது ‘தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்’ என்ற ஆவணப்படம். முதுமலையில் யானைகளை பராமரிக்கும் பொம்மன், பெள்ளி என்ற தம்பதியினர், தாயை பிரிந்துவரும் குட்டி யானைகளைளை எப்படி பராமரிக்கிறார்கள் என்பதே அந்த ஆவணப்படத்தின் கதை. பொம்மன், பெள்ளி தம்பதியரே அதில் நடித்த்திருந்தனர். கார்த்திகி கொன்சால்வெஸ் இயக்கிய “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படம், ஆஸ்கர் விருதை வென்றது. இதனால் பெரு மகிழ்ச்சி அடைந்த அந்த தம்பதியருக்கு, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முதல்வர் பாராட்டு

இந்நிலையில் “தி எலிஃபேண்ட் விஸ்பரர்ஸ்” ஆவணப்படத்தில் நடித்த பொம்மன், பெள்ளி தம்பதியனரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசுகளை வழங்கி அவர், ஒரு லட்சம் ரூபாய் பரிசளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here