நடிகர் பிரபாஸுக்கு உடல் நிலை சரி இல்லை என்றும் அதனால் சலார் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறுகின்றனர்.

பாகுபலி புகழ்

ஈஸ்வர் என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமான நடிகர் பிரபாஸ். பாகுபலி படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பிரபலமானார். இயக்குநர் ராஜமௌலி இயக்கிய பாகுபலி திரைப்படம் உலகளவில் இவரை பிரபலமாக மாற்றியது. தற்போது கே ஜி எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கி வரும் “சலார்” படத்தில் நடித்து வருகிறார் நடிகர் பிரபாஸ். இவர் நடிப்பில் ஆதிபுருஷ் திரைப்படம் ஜூன் 16ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில், இப்படத்திற்கான போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

சிகிச்சையில் பிரபாஸ்

சலார் படத்தின் படப்பிடிப்புகளில் கலந்து கொண்டிருந்த நடிகர் பிரபாஸுக்கு உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். இதனால் சிகிச்சைக்காக அவர் வெளிநாடு சென்றுள்ளதாகவும் தகவல்கள் வெளிவருகின்றது. பிப்ரவரி மாதம் உடல்நலக் குறைவு காரணமாக படப்பிடிப்பை நிறுத்திவிட்டு சிகிச்சை எடுத்துக் கொண்டதாகவும் கூறுகின்றனர். இதனால் சலார் படப்பிடிப்பு பாதையில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறி வரும் நிலையில், இது குறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வமான தகவலும் வெளிவரவில்லை. இதனால் பிரபாஸ் ரசிகர்கள் மிகவும் கவலையில் உள்ளனர். விரைவில் படத்தைக் குறித்து அப்டேட்டும், ஹீரோ பிரபாஸ் குறித்து அப்டேட்டும் படக்குழு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here