நடிகர்களை விட நடிகைகளே அதிகமாக திருமண வதந்திகளில் சிக்குவதால் தான் நான் பலமுறை திருமணம் செய்துகொண்டது போல் உணர்கிறேன் என்று நடிகை தமன்னா கூறியுள்ளார்.

18 வருடங்கள்

கேடி என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகத்திற்கு அறிமுகமான நடிகை தமன்னா, வியாபாரி, கல்லூரி, அயன் போன்ற பல ஹிட் படங்களை கொடுத்தார். அதிலும் இவர் நடித்த கல்லூரி திரைப்படம் மிகப்பெரிய ஹிட் பெற்றது. அதன்பிறகு முன்னணி நடிகர்களுடன் நடிக்க துவங்கினார். படிக்காதவன், அயன், பையா, சுறா போன்ற படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். சூர்யா, விஜய், தனுஷ், கார்த்தி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த தமன்னா, தற்போது சூப்பர் ஸ்டாருடன் இணைந்து நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு கன்னடம் உள்ளிட்ட பல மொழியிலும் முத்திரை பதித்திருக்கும் நடிகை தமன்னா, போலா ஷங்கர் என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.

காதலில் தமன்னா

தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து ஜெயிலர் படத்தில் நடித்து வரும் தமன்னா, அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். இந்நிலையில் சமீப காலமாக சமூகவலைத்தளத்தில் தமன்னாவுக்கு திருமணம் என்றும் பல காதல் கிசுகிசுகள் பரவி வருகின்றது. இதுகுறித்து தமன்னா பேட்டி ஒன்றில் பேசியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது, “காதல் வதந்திகள் தொடர்ந்து பரவி வருகின்றன. அவை அனைத்தையும் தெளிவுபடுத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு மேல் இதுபற்றி சொல்வதற்கு ஏதுமில்லை.

பலமுறை திருமணம்

நடிகர்களை விட நடிகைகளே அதிகமாக திருமண வதந்திகளில் சிக்குகிறார்கள். அது ஏன் நடக்கிறது என்பது தெரியவில்லை. உண்மையிலேயே நடிகைகள் திருமணம் செய்துகொள்வதற்கு முன், பலமுறை திருமணம் செய்துகொண்டதாகச் செய்திகள் வருகின்றன. டாக்டர் முதல் தொழிலதிபர் வரை பலரை எனக்கு திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். இதனால், நான் பலமுறை திருமணம் செய்து கொண்டதாக உணர்கிறேன். ஆனால், உண்மையில் நான் திருமணம் செய்துகொண்டால் என்ன நடக்கும் என்று தெரியவில்லை. அவர்கள் உற்சாகமாவார்களா? அல்லது இதுவும் வதந்தி தான் என நினைப்பார்களா? எனத் தெரியவில்லை” என்று தமன்னா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here