தனது வீட்டில் உள்ள லிங்க பைரவி முன் தியானம் செய்யும் நடிகை சமந்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மிகுந்த எதிர்பார்ப்பு

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களை கொடுத்து வந்த இவர், சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் வெளியான யசோதா திரைப்படம் பலரின் கவனத்தை பெற்றது. தற்போது இவரது நடிப்பில் வெளிவர இருக்கும் சாகுந்தலம் திரைப்படமும் மிகுந்த எதிர்பார்ப்பை கொண்டுள்ளது. தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என ஐந்து மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியாக இருக்கும் இந்த சாகுந்தலம் திரைப்படம், ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ் புத்தாண்டு அன்று வெளியாக இருக்கிறது.

லிங்க பைரவி வழிபாடு

தீவிரமாக உடற்பயிற்சி செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகை சமந்தா. பொதுவாக முன்னணி நடிகையாக இருப்பவர்கள் சமூக வலைதளங்களில் இருந்து கொஞ்சம் ஒதுங்கியே இருப்பார்கள். ஆனால் நடிகை சமந்தா அடிக்கடி தனது படத்தின் போஸ்டர்களையும், போட்டோ சூட் புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்து வருவார். அந்த வகையில் தற்போது இவர் பகிர்ந்துள்ள புகைப்படம் பலரின் கவனம் பெற்று வருகிறது. தனது வீட்டில் முன் அமர்ந்து வழிபடும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்நோடு அவர் வெளியிட்டுள்ள பதிவில்; சில சமயங்களில் சூப்பர் ஹியூமன் சக்தி தேவை இல்லை. உங்களது நம்பிக்கை எங்கு வேண்டுமானாலும் கொண்டு செல்லும். நம்பிக்கை உங்களை அமைதியாக வைத்திருப்பதோடு நல்ல ஆசிரியராகவும், நண்பராகவும் மாற்றும். மொத்தத்தில் நம்பிக்கை மட்டும் தான் உங்களை சூப்பர் ஹியூமன் ஆக மாற்றும் என்று பதிவிட்டுள்ளார். மயோசிடிஸ் எனும் நோயினால் பாதிக்கப்பட்ட சமந்தா தற்போது அதில் இருந்து மீண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here