ஆன்லைன் மோசடி கும்பல் ஒன்று நடிகை நக்மாவிடம் ஒரு லட்சம் ரூபாய் அபேஸ் செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகை

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழி படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை நக்மா. தமிழில் ரஜினிகாந்த், சரத்குமார், கார்த்திக், பிரபுதேவா உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்துள்ளார். நக்மா நடித்த பல படங்கள் ஹிட் ஆகியுள்ளது. தற்போது சினிமாவில் இருந்து விலகி இருக்கும் நக்மா, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தீவிர அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.

பணம் அபேஸ்

இந்த நிலையில், நக்மாவின் செல்போனுக்கு சமீபத்தில் ஒரு குறுந்தகவல் ஒன்று வந்தது. அதில், இருந்த ‘லிங்’கை நடிகை நக்மா ‘கிளிக்’ செய்த உடனே, ஒருவர் அவரை தொடர்பு கொண்டு தன்னை வங்கி அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டுள்ளார். அந்த நபர், நக்மாவிடம் உங்களது வங்கி கணக்கின் கே.ஒய்.சி. புதுப்பிக்க உதவுவதாக கூறியுள்ளார். சிறிது நேரத்தில் நக்மாவின் வங்கி கணக்கில் இருந்து ரூ.99 ஆயிரத்து 998 அபேஸ் செய்யப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த நடிகை நக்மா மும்பை சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.

மோசடி கும்பல்

இந்த மோசடி பற்றி நக்மா கூறுகையில்; “லிங்கில் கேட்கப்பட்டு இருந்த விவரங்களை நான் பகிரவில்லை. இருப்பினும் எதிர்முனையில் பேசிய நபர், கே.ஒய்.சி.யை புதுப்பித்து தருவதாக கூறி, எனது இன்டர்நெட் பேங்கிங் மூலம் வேறொரு வங்கி கணக்கிற்கு பணத்தை பரிவர்த்தனை செய்துள்ளார். நல்ல வேளையாக நான் பெரும் தொகையை இழக்கவில்லை” என்றார். சமீபத்தில் மும்பையில் சுமார் 40 பேரிடம் மோசடி கும்பல் ஒன்று ஆன்லைன் மூலம் லட்ச்சக்கணகான பணத்தை அபேஸ் செய்தது. அதில் நடிகை சுவேதா மேனனும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here