இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மானின் மகன் பெரும் விபத்திலிருந்து உயிர் தப்பி தப்பியுள்ள தகவல் அறிந்த ரசிகர்கள் பெரும் அதிர்ச்சியில் உள்ளனர்.

இசையில் ஆர்வம்

தமிழில் மட்டுமில்லாமல் பாலிவுட், ஹாலிவுட் என்று அனைத்திலும் முன்னணி இசையமைப்பாளராக இருக்கக்கூடியவர் ஏ.ஆர்.ரஹ்மான். இவருக்கு கதீஜா ரஹ்மான், ரஹீமா என்ற இருமகள்களும், அமீர் என்ற மகனும் உள்ளார். கதீஜாவுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. ஏ.ஆர்.அமீன், அப்பாவைப் போலவே இசையில் மிகவும் ஆர்வம் கொண்டு, பல படங்களிலும் பாடகராக உள்ளார். அது மட்டும் இல்லாமல் பல இசை ஆல்பங்களையும் உருவாக்கி வருகிறார். ஓகே கண்மணி படத்தில் இடம்பெற்ற மௌலா வா என்னும் பாடலை இவர் பாடியுள்ளார். சச்சின் 2.0, தில் பேச்சரா உள்ளிட்ட பல படங்களிலும் பாடியுள்ளார். தனது இசை மூலம் இவரும் பல ரசிகர்களை பெற்று வருகின்றனர்.

உயிர் தப்பினார்

இந்த நிலையில், மிகப்பெரிய விபத்தில் இருந்து தான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியதாக ஏ.ஆர் அமீன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதுதொடர்பாக இன்ஸ்டாகிராமில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “இன்று நான் பாதுகாப்பாகவும் உயிருடனும் இருப்பதற்காக எல்லாம் வல்ல இறைவனுக்கும், எனது பெற்றோருக்கும், குடும்பத்தினருக்கும், எனது நலம் விரும்புகளுக்கும் எனது ஆன்மீக குருமார்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இரவு 3:00 மணி அளவில் பாடல் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு வந்தது. அதில் கேமரா முன் மும்மரமாக பாடிக் கொண்டே இருந்தேன். அப்போது கிரேனில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டிரஸ் மற்றும் சரவிளக்குகள் திடீரென கீழே சரிந்தன. நல்ல வேலையாக நடுவில் நான் நின்று கொண்டிருந்தேன். இன்னும் சில அங்குலங்கள் முன்னரோ, பின்னரும் நின்றிருந்தாலோ, அங்கும் இங்கும் நடந்து கொண்டிருந்தாலோ மொத்தமும் தலையில் விழுந்திருக்கும். என்னால் இன்னும் இந்த அதிர்ச்சியில் இருந்து மீள முடியவில்லை” என பதிவிட்டுள்ளார். அமீனின் இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் பேரதிர்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here