பிரபல நடிகை அனிகா விக்ரமன் தனது காதலனால் படுமோசமாக தாக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சில படங்கள்

தமிழில் “க்” படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அதிகமானவர் அனிகா விக்ரமன். பிறகு விஷமக்காரன், எங்க பாட்டன் பாத்தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் நடிகை அனிகா தனது முன்னாள் காதலன் தன்னை மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்தியதாக உடலில் ஏகப்பட்ட காயங்களுடன் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து துன்புறுத்தல்

இதுகுறித்து அனிகா விக்ரமன் கூறி இருப்பதாவது;- எனது முன்னாள் காதலர் அனூப் பிள்ளை என்னை அடித்து துன்புறுத்தினார். போலீசில் புகார் அளித்துள்ளேன். பல ஆண்டுகளாக அனூப் பிள்ளை மனதளவிலும், உடலளவிலும் என்னை துன்புறுத்தி வந்தார். அவர் என்னை இரண்டாவது முறையாக துன்புறுத்தியபோது, பெங்களூரு போலீசில் புகார் அளித்தேன். முதலில் சென்னையில் வைத்து என்னை அடித்தார். அன்று அவர் அழுது புலம்பி கெஞ்சி கேட்டதால் நான் புகார் அளிக்கவில்லை. நான் முட்டாளாக இருந்தேன்.

நியாயம் வேண்டும்

கடந்த சில வருடங்களாக நான் பலமுறை அனூப் பிள்ளையால் கடுமையாக தாக்கப்பட்டிருக்கிறேன். அவரை விட்டு விலக முடிவு செய்தேன். ஆனால், அவர் என்னை விட்டுப் பிரியத் தயாராக இல்லை. என் போனை உடைத்தார். படப்பிடிப்புக்கு போகவிடாமல் பல இடையூறுகளை செய்தார். லேப்டாப்பில் என் வாட்ஸ்அப் மெசேஜ் எல்லாம் எனக்கு தெரியாமல் பார்த்து என்னை தினமும் அடித்து கொடுமைப்படுத்தினார். தற்போது அனூப் நியூயார்க்கில் தலைமறைவாக இருக்கிறார். எனது குடும்பத்தினரையும் கொன்று விடுவதாக மிரட்டுகிறார். நான் அனுபவித்த துன்பத்திற்கு நிச்சயம் நியாயம் வேண்டும். தற்போது காயங்கள் கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருகிறது. விரைவில் படப்பிடிப்பில் கலந்து கொள்வேன் என் நடிகை அனிகா தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here