சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியல் மூலம் மீண்டும் நடிக்க வருகிறார் செம்பருத்தி சீரியல் புகழ் ஷபானா.

செம்பருத்தி பார்வதி

ஜீ தமிழ் தொலைகாட்சியில் பல வருடங்களாக ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்த தொடர் செம்பருத்தி. இந்த தொடர் முடிவுக்குப் பிறகு அதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகை ஷபானா, எந்த ஒரு தொடரிலும் நடிக்காமல் இருந்தார். செம்பருத்தி தொடரில் பார்வதியாக ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் அவர். இந்த சீரியல் முடிவுக்கு பிறகு எந்த சீரியலில் இவர் நடிப்பார் என்று ரசிகர்கள் மத்தியில் பல கேள்விகள் இருந்து வந்தது. மேலும் செம்பருத்தி சீரியல் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே ஷபானாவுக்கு திருமணமும் நடைபெற்றது.

மிஸ்டர் மனைவி

தற்போது சன் டிவியில் மிஸ்டர் மனைவி என்ற சீரியலில் நடித்து வருகிறார் நடிகை ஷபானா. சன் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் கண்ணான கண்ணே சீரியல் முடிவடைந்த பிறகு, மிஸ்டர் மனைவி தொடர் ஒளிபரப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த தொடரின் பெயர் மிஸ்டர் மனைவி என்பதால், இவருக்கு முக்கியமான ரோல் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

உருக்கமான பதிவு

இந்நிலையில் ஷபானா தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் உருக்கமான பதிவை ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது; “இறுதியாக இதோ எங்களின் புதிய சீரியல் ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. ரொம்ப நாள் வெயிட் பண்ணி ரொம்ப சந்தோசமா இருந்துச்சு போஸ்ட் பண்ணும் போது, இனி உங்களுடைய ஆசிகள் தேவை” என்று பதிவிட்டிருக்கிறார். அது மட்டுமல்லாமல் இந்த திட்டத்தை பற்றி சொல்ல நான் காத்திருக்க முடியாது. அடுத்த ப்ரோமோவிற்காக காத்திருப்போம். அதை நீங்கள் அனைவரும் ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த சீரியலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் ஒவ்வொரு காட்சியும் உங்களுக்கு பிடிக்கும். உங்களுடைய ஆசிகள் தேவை. உங்கள் அனைவரையும் மகிழ்விக்க எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்” என்றும் ஷபானா அதில் குறிப்ப்பிட்டிருக்கிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here