நடிகர் விஷாலை வைத்து போலீஸ் கதையில் புது படத்தை இயக்கப் போகிறார் இயக்குநர் ஹரி.

ஹிட் படங்கள்

2002 ஆம் ஆண்டு தமிழ் என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் ஹரி. அதன்பிறகு இவர் இயக்கிய சாமி, கோவில், அருள், ஐயா, ஆறு, தாமிரபரணி போன்ற பல படங்கள் சூப்பர் ஹிட் ஆனது. 2010 ஆம் ஆண்டு இவர் இயக்கிய சிங்கம் திரைப்படம், இவருக்கு மட்டும் இல்லாமல் சூர்யாவுக்கும் சூப்பர் ஹிட் திருப்புமுனை படமாக அமைந்தது. சிங்கம் படத்தின் அடுத்த பாகமான சிங்கம் 2 படத்தையும் இயக்கி இருந்தார் ஹரி. அதேபோல் விக்ரம் நடிப்பில் வெளியான சாமி திரைப்படமும் சூப்பர் ஹிட் படமாக அமைந்ததால், அந்தப் படத்தையும் இரண்டாம் பாகமாக சாமி ஸ்கொயர் என்று இயக்கியிருந்தார். ஆனால் அந்த படம் ரசிகர்களிடையே எதிர்பார்த்த அளவு வரவேற்பு பெறவில்லை. இவர் இயக்கிய சாமி, சிங்கம் போன்ற போலீஸ் கதைகள் வித்தியாசமாக இருந்தது. பல போலீஸ் கதைகள் வந்தாலும் இன்றும் இந்த படங்கள் ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.

மீண்டும் போலீஸ் கதை

சமீபத்தில் இவர் இயக்கிய யானை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் அருண் விஜய் மற்றும் பிரியா பவானி சங்கர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தநர். இந்த படத்திற்காக பல ப்ரமோஷன்களை படக்குழுவினர் செய்து வந்தனர். இருப்பினும் யானை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றதால், மீண்டும் தனக்கு கைதேர்ந்த போலீஸ் கதையை கையில் எடுத்து உள்ளார் இயக்குநர் ஹரி. இந்த படத்தில் விஷால் ஹீரோவாக நடிக்கிறார். கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன் பெஞ்ச் நிறுவனம் தயாரிக்கின்றது. வரும் செப்டம்பர் அல்லது அக்டோபரில் புதிய படத்திற்கான படப்பிடிப்புகள் தொடங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஷால் நடிப்பில் ஏற்கனவே தாமிரபரணி, பூஜை போன்ற படங்களை ஹரி இயக்கி இருக்கிறார். போலீஸ் கதை என்றால் வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் எடுக்கும் இயக்குநர் ஹரிக்கு இந்த படம் கண்டிப்பாக ஒரு சூப்பர் ஹிட் படமாக அமையும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த படம் குறித்த கூடுதல் தகவல்களை பட குழுவினர் விரைவில் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here