கடந்த 3 சீசன்களாக ரசிகர்களின் பேராதரவை பெற்ற குக் வித் கோமாளி நிகழ்ச்சி வெற்றிகரமாக 4வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 சீசன்களிலும் கலக்கிய மணிமேகலை குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அவரது பதிவு ரசிகர்களுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்தது. இந்த வார எபிசோடுக்கான ப்ரமோ வீடியோக்கள் வெளியான நிலையில், மணி மேகலையை மிஸ் செய்வதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். மணிமேகலை தனது பதிவில், நிகழ்ச்சியின் தயாரிப்பாளர்கள், இயக்குநர் உள்ளிட்ட நிகழ்ச்சி ஏற்பட்டாளருக்கு நன்றி கூட தெரிவிக்கவில்லை. இதனால் நிகழ்ச்சி ஏற்பட்டாளர்களுடன் ஏற்பட்ட பிரச்னை காரணமாகவே அவர் விலகியதாக கூறப்படுகிறது. மற்றொரு பக்கம் அவர் கர்ப்பமாக இருக்கிறார், அதன் காரணமாகவே நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை என்றும் தகவல் பரவி வருகிறது. இப்படி அவர் விலகியதற்கான பல்வேறு தகவல்கள் பரவினாலும், மணிமேகலை இதுவரை தான் விலகியதற்கான காரணத்தை வெளியிடவில்லை. இதனிடையே மணிமேகலை தொடர்பாக தவறான தகவல்களை தெரிவிக்க வேண்டாம் என குக் வித் கோமாளி புகழ் கேட்டுக் கொண்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here