பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் வெளியேறப்போவதாக தகவல் நிலவி வருகிறது.

கூட்டுக் குடும்பம்

அண்ணன் தம்பிகளின் பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் தொடர் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இந்த தொடர் பல ரசிகர்களைக் கொண்டுள்ளது. கூட்டு குடும்பமாக இருக்கும் இந்த தொடரில் நான்கு அண்ணன்களின் பாச கதையே முக்கியமான கதையாக உள்ளது. அதில் கதிர் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் குமரன் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றவர். வி.ஜே. சித்ரா இந்த தொடரில் நடித்துக் கொண்டிருக்கும் சமயத்தில், முல்லை என்ற கதாபாத்திரத்தில் குமரனுக்கு ஜோடியாக நடித்திருந்தார். வி.ஜே. சித்ரா மறைவுக்கு பிறகு, அந்த கதாபாத்திரத்தில் 3 நடிகைகள் மாற்றப்பட்டுவிட்டனர். இந்நிலையில் குமரன் மட்டும் கதிர் கதாபாத்திரத்தில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அடுத்த கட்டம்

சமீப காலமாக வெப்தொடர் மற்றும் படங்களில் நடிப்பதில் அதிக கவனம் செலுத்தி வரும் குமரன், வதந்தி வெப் தொடரில் நடித்தார். மிஸ்டரி க்ரைம் திரில்லராக உருவாக்கப்பட்டிருந்த இந்த வெப் தொடரில் எஸ்.ஜே சூர்யா, லைலா, நாசர், குமரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்நிலையில் இந்த வெப் தொடரில் கிடைத்த வரவேற்பு காரணமாக, இவருக்கு அடுத்த வெப் தொடரில் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. தற்போது மாயதோட்டா என்ற வெப் தொடரில் நடித்து வருகிறார். அது மட்டும் இல்லாமல், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

நிலவும் குழப்பம்

தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் இருந்து குமரன் வெளியேறப் போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. அது மட்டும் இல்லாமல், வேற எந்த தொடரிலும் அவர் நடிக்க ஒப்பந்தம் ஆகாமல் இருக்கிறார் என்றும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முடித்துவிட்டு அதன்பிறகு சீரியலிலேயே நடிக்க மாட்டார் என்றும் கூறப்படுகிறது. இனி வெப் தொடரிலும், சினிமாவிலும் நடிப்பதில் கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகின்றது. ஆனால் இதுகுறித்து எந்த ஒரு தகவலையும் குமரன் வெளிப்படையாக கூறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here