ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் மையத்தில் இருந்து அதிமுக வேட்பாளர் தென்னரசு திடீரென வெளியேறினார்.

இடைத்தேர்தல்

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈவேரா மாரடைப்பால் மரணம் அடைந்தார். இதனையடுத்து அந்த தொகுதியில் பிப்ரவரி 27-ம் இடைத்தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டார். அதிமுக சார்பில் தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தேமுதிக சார்பில் ஆனந்த் உள்பட 77 பேர் களம் கண்டனர். இந்த நிலையில், 27-ம் தேதி நடைபெற்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி ஈரோடு சித்தோடு கல்லூரியில் நடைபெற்று வருகிறது.

முன்னிலை

16 மேஜைகளில் 15 சுற்றுகளாக வாக்குகள் எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், 6-வது சுற்றின் முடிவில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் 46,174 வாக்குகள் பெற்று, 30 அயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். அதிமுக வேட்பாளர் தென்னரசு 16,777 வாக்குகள் பெற்று இரண்டாவது இடத்திலும், 2,964 வாக்குகள் பெற்று நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்திலும் உள்ளன. 431 வாக்குகள் பெற்று தேமுதிக 4-வது இடத்தில் உள்ளது.

வெளியேறிய வேட்பாளர்

இந்த நிலையில், 4-வது சுற்று வாக்கு எண்ணும் பணி நடைபெற்ற போது அதிமுக வேட்பாளர் தென்னரசு திடீரென வாக்கு எண்ணும் மையத்தில் இருந்து வெளியேறினார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், பணநாயகம் வென்றது, ஜனநாயகம் தோற்றது என்று கூறிவிட்டு காரில் ஏறி புறப்பட்டுச் சென்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here