நடிகர் சூர்யா அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் குறித்த தகவல் வெளிவந்துள்ளது.

10 மொழிகளில் வெளியீடு

தமிழில் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய நடிகர் சூர்யா, தற்போது சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். தற்காலிகமாக சூர்யா 42 என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி உட்பட மொத்தம் 10 மொழிகளில் வெளியாக உள்ளது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் சூர்யா நடிக்க இருக்கும் அடுத்த படம் குறித்து அப்டேட்டும் வெளிவந்துள்ளது.

பிரிட்டானியா

பிரபல பிஸ்கட் நிறுவனமான பிரிட்டானியா நிறுவனத்தின் உரிமையாளர் ராஜன் பிள்ளை பையோ பிக்கில் நடிகர் சூர்யா நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ராஜன் பிள்ளை கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் சூர்யா. இந்தப் படத்தை பிரபல மலையாள நடிகரான பிரித்விராஜ் இயக்க உள்ளார். இதற்கான சந்திப்பு சமீபத்தில் நடைபெற்றுள்ளது. அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகின்றது. பிரித்விராஜ் நடிகராக மட்டுமில்லாமல் இயக்குனராகவும் வெற்றி பெற்றுள்ளார். இவர் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான லூசிபர் திரைப்படம் சூப்பர் ஹிட் ஆனது குறிப்பிடத்தக்கது.

கூடிய எதிர்பார்ப்பு

ஏற்கனவே பயோபிக் படமான சூரரைப் போற்று படத்தில் நடித்து தேசிய விருதுகளை குவித்த நடிகர் சூர்யா, தற்போது மீண்டும் பயோபிக் படத்தில் நடிக்க உள்ளார். சூரரைப்போற்று ஜி.ஆர். கோபிநாத்தின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படமாக அமைந்தது. இப்படத்தை இயக்கியவர் சுதா கொங்கரா. இந்தப் படம் OTT தளத்தில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்றது. பயோபிக் படங்கள் என்றாலே பின்னி பெடல் எடுப்பார் சூர்யா என்பதால் அடுத்து நடிக்க இருக்கும் பயோபிக் படத்தின் எதிர்பார்ப்பும் கூடி வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here