சமூக வலைதளத்தில் பகிரப்பட்ட பதிவிற்கும் தனது தந்தைக்கு எந்த சம்பந்தமும் இல்லை என்று நடிகர் மாரிமுத்துவின் மகன் விளக்கம் கொடுத்துள்ளார்.

நடிகராக வெற்றி

இயக்குநர்கள் வசந்த், எஸ்.ஜே. சூர்யா, மணிரத்னம், சீமான் உள்ளிட்ட பலரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர் மாரிமுத்து. கண்ணும் கண்ணும், புலிவால் போன்ற படங்களையும் இயக்கியுள்ளார். நடிகராக தன்னை நிரூபித்து தற்போது பல முன்னணி இயக்குநர்கள் படத்தில் நடித்து வருகிறார். வாலி, கொம்பன், திரிஷா இல்லனா நயன்தாரா, கொடி, பைரவா, எமன் போன்ற படங்களில் மட்டும் இல்லாமல், கிட்டத்தட்ட 75 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.

தொடர்களில் டாப்

தற்போது டிவி தொடர்களிலும் நடித்து வருகிறார் மாரிமுத்து. சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் என்ற தொடரில் ஆதிமுத்து குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகிறார். இந்நிலையில் 18 பிளஸ் கண்டன்டுகளை பதிவிடும் சமூக வலைதள பக்கத்தில் இருந்து ஒரு பெண்ணின் புகைப்படத்துடன், “கேன் ஐ கால் யூ” என குறிப்பிடப்பட்டிருந்தது. இதற்கு மாரிமுத்துவின் பெயருடன் கூடிய கணக்கிலிருந்து உடனடியாக ரிப்ளை வந்ததை பார்த்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதாவது “எஸ்” என பதிலளித்து மாரிமுத்துவின் மொபைல் நம்பரும் குறிப்பிடப்பட்டிருந்தது. பதிவிட்டு இருந்த நம்பர் இவருடையது என்று உறுதியானதும் இவரது ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள்.

விளக்கமளித்த மகன்

பெரும் சர்ச்சையான இந்த விவகாரம் குறித்து அவரது மகன் விளக்கம் அளித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, “அதில் கமெண்ட் செய்து இருப்பது என் தந்தையின் அக்கவுண்ட் இல்லை. அவரது போன் நம்பர் ஏராளமானோருக்கு தெரியும். இதனால் யாரோ அதனை தவறாக பயன்படுத்தி உள்ளனர்” எனக் குறிப்பிட்டுள்ளார். மாரிமுத்து மகனின் விளக்கத்திற்கு பிறகு, அந்த போலி பதிவு நீக்கப்பட்டுவிட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here