தமிழில் நல்ல கதை உள்ள படங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன் என்று நடிகை ஸ்ரேயா கூறியுள்ளார்.

20 வருடம்

எனக்கு 20 உனக்கு 18 படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஸ்ரேயா. தனது முதல் படத்திலேயே கவர்ச்சிக்கு குறைவில்லாமல் நடித்து பல ரசிகர்களின் கவனத்தை திசை திருப்பினார். தொடர்ந்து ஹிந்தி, தெலுங்கு படங்களில் நடிப்பதில் கவனம் செலுத்தி வந்த ஸ்ரேயா, மழை படத்தின் மூலம் ஹீரோயின் ஆக பிரபலமானார். இந்த படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு திருவிளையாடல் ஆரம்பம், சிவாஜி போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார்.

உலக அளவு ஹிட்

முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து தமிழில் கிட்டத்தட்ட 20 வருடங்களாக முன்னணி நடிகையாகவே இருந்து வருகிறார் நடிகை ஸ்ரேயா. ரஜினி, விக்ரம், தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். தற்போது இவரது நடிப்பில் கப்ஜா திரைப்படம் வெளிவர தயாராக உள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு முழுவதும் நிறைவடைந்ததை தொடர்ந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றது. மார்ச் 17ஆம் தேதி திரையரங்குகளில் இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான RRR திரைப்படம் உலக அளவில் ஹிட்டானது.

தமிழில் நடிக்க ஆசை

கப்ஜா பட ப்ரோமோஷனில் பங்கேற்ற ஸ்ரேயா கூறுகையில், “தமிழ் படங்களில் நடிக்க வேண்டும் என்பது என் விருப்பம். தமிழ் சினிமா எனக்கு நிறைய நல்ல படங்களை கொடுத்துள்ளது. ஷங்கர் சார் போன்ற பெரிய இயக்குநர்களுடன் வேலை செய்திருக்கிறேன். திருமணம் ஆகி குழந்தை பெற்றது, பிறகு கோவிட் என ஒரு சின்ன பிரேக் இருந்தது உண்மைதான். குறிப்பாக கோவிட் காலத்தில் மீண்டும் நடிக்க வருவோமா என்ற நிலை தான் பலருக்கும் இருந்தது. ஆனால் இனி வேலை செய்யும் ஒவ்வொரு நாளையும் மதிப்பு மிக்கதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கிறேன். தமிழ் சினிமாவில் நடிக்க வாய்ப்பு வந்தால் கண்டிப்பாக நடிப்பேன். அதே நேரத்தில் நல்ல படங்களை தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதில் கவனமாக இருக்கிறேன். என் படங்களை நாளை என் மகள் ராதா வளர்ந்து பெரியவளாகும் போது பார்த்து பெருமைப்பட வேண்டும்” என்று ஸ்ரேயா கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here