கணவருடன் மகிழ்ச்சியாக பலமுறை முயற்சி செய்தும் முடியாததால் அவரை விவாகரத்து செய்துவிட்டதாக நடிகை கவுதமி நாயர் கூறியிருக்கிறார்.

காதல் திருமணம்

2012ல் துல்கர் சல்மானுடன், ‘செகண்ட் ஷோ’ என்ற படத்தில் நாயகியாக அறிமுகமானவர் கவுதமி நாயர். அதனைதொடர்ந்து டைமண்ட் நெக்லஸ், கூதரா, கேம்பஸ் டைரி, 2018 உள்பட படங்களில் நடித்தார். சமீபத்தில் வெளியான ‘விரித்தம்’ என்ற படத்தை முதல் முதலாக அவர் இயக்கினார். இந்த நிலையில், அவரது முதல் படமான ‘செகண்ட் ஷோ’வை இயக்கிய ஸ்ரீநாத் ராஜேந்திரனுடன் காதல் மலர்ந்தது. பல வருட காதலுக்கு பிறகு, இருவரும் கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இதற்கிடையே, கணவர் ஸ்ரீநாத் ராஜேந்திரனை விவாகரத்து செய்துவிட்டதாக கவுதமி நாயர் தெரிவித்து உள்ளார்.

பலனில்லை

இதுகுறித்து அவர் கூறியதாவது; கடந்த 2012 முதல் ஸ்ரீநாத் ராஜேந்திரனை எனக்குத் தெரியும். பல வருடங்களாக 2 பேரும் தீவிரமாக காதலித்து வந்தோம். அதன்படி கடந்த 2017ல் செய்து கொண்டோம். முதல் 3 வருடங்கள் எங்களது திருமண வாழ்க்கை மிகவும் மகிழ்ச்சியாக சென்றது. ஆனால், அதன்பிறகு எங்களுக்கு இடையே சில கருத்து வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. அதையெல்லாம் மறந்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு பல முயற்சிகளை எடுத்தோம். ஆனால், எதுவுமே பலிக்கவில்லை. இதனால் வேறு வழி இல்லாமல் 2 பேரும் பிரிய தீர்மானித்தோம். இவ்வாறு அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here