நடிகை சமந்தா செய்து வரும் சில விஷயங்களை கைவிட வேண்டும் என்று ஃபேமிலி மேன் வெப் தொடரில் நடித்துள்ள நடிகர் மனோஜ் பாஜ்பாய் கூறியுள்ளார்.

தேறி வரும் சமந்தா

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருந்து வரும் நடிகை சமந்தா, அனைத்து முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் வெளியாக இருக்கும் திரைப்படம் சாகுந்தலம் .குணசேகர் இயக்கத்தில் தேவ் மோகனுடன் இணைந்து இந்த படத்தில் நடித்துள்ளார் நடிகை சமந்தா. கடந்த ஆறு மாதங்களாக உடல் நலத்தில் பல பிரச்சனைகளை சந்தித்து வரும் சமந்தா, தற்போது மெல்ல மெல்ல தேறி வருகிறார். தீவிரமான உடற்பயிற்சி செய்தும் தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார் நடிகை சமந்தா.

உடனடியாக நிறுத்த வேண்டும்

ஹிந்தியில் முன்னணி நடிகராக இருக்கும் மனோஜ் பாஜ்பாய் சமந்தாவுடன் இணைந்து பேமிலி மேன் வெப் தொடரில் நடித்திருந்தார். ஃபேமிலி மேன் சீசன் 1, சீசன் 2 என இரண்டும் வேற லெவல் ஹிட் ஆனதும், தற்போது ஃபேமிலி மேன் சீசன் 3 வெளியாக தயாராக உள்ளது. கடந்த சீசனில் ஸ்ரீகாந்த் திவாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த மனோஜ் பாஜ்பாயின் கதாபாத்திரம், ரசிகர்களிடையே வெகுவாக கவர்ந்தது. இவர் நடிகை சமந்தாவுக்கு அறிவுரை ஒன்றை கூறியுள்ளார். சமூக வலைதளத்தில் ஒர்க்அவுட் செய்யும் வீடியோக்களையும், புகைப்படங்களையும் வெளியிட்டு வரும் நடிகை சமந்தாவை பார்த்து நடிகர் மனோஜ் பாஜ்பாய், “சமந்தா மிகவும் கடினமாக உழைப்பவர். அவர் ஃபிசிக்கலாக செய்யும் விஷயங்களை பார்த்து நான் பயந்துள்ளேன். அவருக்கு வலி கொடுக்கக்கூடிய விஷயங்களை அவர் உடனடியாக நிறுத்த வேண்டும். எளிமையானவற்றை செய்ய வேண்டும்” என அறிவுரை கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here