பாடலாசிரியரும், நடிகருமான சினேகனுக்கு அவரது மனைவி கொடுத்திருக்கும் காதல் பரிசு பற்றிய புகைப்படங்கள் தற்போது வைரலாகி கொண்டிருக்கின்றது.

சூப்பர் ஜோடி

தமிழ் சினிமாவில் முன்னணி பாடலாசிரியர்களுள் ஒருவரான கவிஞர் சினேகன், கன்னிகாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்டமாக நடைபெற்ற இவரது திருமணத்தில் கமலஹாசன் கலந்து கொண்டு வாழ்த்தினார். திருமணத்திற்கு பிறகு எங்கு ஜோடியாக சென்றாலும் இருவரும் ஒரே மாதிரியான உடை அணிந்து சென்று அனைவரையும் வியப்பில் ஆழ்த்தி வருகின்றனர். அதேபோல் பார்ப்பவர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் பல புகைப்படங்களை கன்னிகா தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டு உள்ளார்.

மெட்டி போட்ட கன்னிகா

சோஷியல் மீடியாக்களில் ஆக்டிவாக இருக்கக்கூடிய கன்னிகா, அன்றாடம் தான் வரையும் ஓவியங்களையும், நிகழ்வுகளையும் அதில் பதிவிட்டும் வருகிறார். காதலர் தினத்தன்று ஒரே நிறத்தில் உடைகள் அணிந்து, தன் காதல் கணவருக்கு காதல் பரிசு ஒன்றையும் கொடுத்துள்ளார் கன்னிகா. அதாவது சினேகனுக்கு காலில் மெட்டி அணிவித்து தனது அன்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் டிரெண்டாகி கொண்டிருக்கின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here