தமிழ் மற்றும் மலையாளத்தில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய நயன்தாரா, தற்போது மாதவனுடன் நடிக்கப்போவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

அடுத்தடுத்த படங்கள்

விஜய், அஜித், சூர்யா, தனுஷ், விஜய் சேதுபதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த நடிகை நயன்தாரா, சமீப காலமாக பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரத்தில் மட்டுமே அதிகமாக நடித்து வருகிறார். திருமணம் குழந்தை என்று பிஸியாக இருந்த அவர், தற்போது அடுத்தடுத்து படங்களில் நடிக்க தயாராகியுள்ளார்.

வரவேற்பு

இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் நயன்தாரா நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது. இவர் ஏற்கனவே யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன், மீண்டும் ஒரு காதல் கதை போன்ற படங்களை இயக்கியவர். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் திருச்சிற்றம்பலம். தனுஷ், நித்யா மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்த இந்த படம், ரசிகர்களிடையே விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது.

சூப்பர் காம்போ

தற்போது இயக்குநர் மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் மாதவன் நடிக்க ஓப்பந்தம் செய்துள்ளார். அதை உறுதி செய்யும் வகையில் மாதவன் சமூக வலைதள பக்கத்தில்; “உங்களுடன் கை கோர்ப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன், உங்களுடன் இணைந்து பணியாற்றவும், சிறந்த நேரத்தை செலவிட்டு படத்தில் மேஜிக் செய்யவும் ஆவலுடன் காத்திருக்கிறேன்” என்று பதிவிட்டு இருந்ததும் குறிப்பிட்டத்தக்கது. இந்த படத்தில் நாயகியாக நயன்தாரா நடிக்கப் போவதாகவும் கூறுகின்றனர். சமீபகாலமாக நயன்தாரா நடிப்பில் வெளியான அனைத்து திரைப்படங்களும் சுமாரான விமர்சனங்களை பெற்ற நிலையில், சூப்பர்ஹிட் வெற்றிக்காக காத்திருக்கிறார் லேடி சூப்பர் ஸ்டார். மித்ரன் ஜவஹர் இயக்கும் படத்தில் மாதவன், நயன்தாரா இணைந்தால், இந்த படம் கண்டிப்பாக ஒரு பிளாக்பஸ்டர் படமாக இருக்கும் என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here