பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் தனது மனைவி குறித்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள பதிவைப் பார்த்த நெட்டிசங்கள் அவரை கேள்வி கேட்டு வருகின்றனர்.

சீரியல் பிரபலம்

பிரபல தொலைக்காட்சி சேனலில் விஜே-வாக தனது கெரியரை தொடங்கியவர் மகாலட்சுமி. பிறகு சீரியல்களில் நடிக்க துவங்கிய மகாலட்சுமி, பல தொடர்களில் நடித்து வந்தார். சீரியல்களில் மிகவும் பிரபலமான இவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆறு வயதில் ஒரு மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக முதல் கணவரை விவாகரத்து செய்த மகாலட்சுமி, தயாரிப்பாளரான ரவீந்தரை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார்.

சோசியல் மீடியா

திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வரும் மகாலட்சுமி, சோசியல் மீடியாக்களில் கணவருடன் இணைந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார். தன் கணவர் ரவீந்தருடன் அடிக்கடி வெளியே செல்லும் புகைப்படங்களை சமூக வலைதளத்தில் ஷேர் செய்து வரும் அவர், சமீபத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலுக்கு சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டு இருந்தார். மகாலட்சுமி எடுத்த செல்பியை ரவீந்தரும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அந்த பதிவிற்கு அவர் கொடுத்திருக்கும் காப்ஷன் தான் நெட்டிசன்களை கேள்வி கேட்க வைத்துள்ளது.

“போந்தா கோழி”

ரவீந்தர் அதில் குறிப்பிட்டுள்ளதாவது; “நீங்கள் பறக்கிறீர்கள், மேகத்தையும் வானத்தையும் பார்க்கிறீர்கள், அதிகமாக நீங்கள் சிரிக்கிறீர்கள், நான் உள்ளே இருக்கும் சொர்க்கத்தை உணர்கிறேன். ஹாப்பியா இருடி போந்தா கோழி!!! என காப்ஷன் கொடுத்துள்ளார். அதற்கு ரிப்ளை கொடுத்த மகாலட்சுமி “என் அன்பே, என்னை இந்த பூமியில் பெருமைமிக்க பெண்ணாக மாற்றியதற்கு நன்றி” என பதில் பதிவு போட்டுள்ளார். மனைவியை போந்தா கோழி என்று சோசியல் மீடியாவில் பதிவு செய்திருப்பது பலரின் கவனம் பெற்றுள்ளது. அது மட்டும் இல்லாமல் மனைவியை இப்படி சொல்லலாமா என பலரும் கேள்வி கேட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here