கர்நாடகாவில் சாலை ஒன்றிற்கு மறைந்த நடிகர் புனித் ராஜ்குமார் பெயரை சூட்டி அம்மாநில அரசு பெருமை சேர்த்துள்ளது.

ரியல் ஹீரோ

கன்னட திரை உலகில் முன்னணி நடிகராக இருந்த புனித் ராஜ்குமார் கடந்த 2021ஆம் ஆண்டு அக்டோபர் 29ஆம் தேதி திடீரென மாரடைப்பால் உயிரிழந்தார். இவரது இறப்பு கன்னடத் திரைத்துறையை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்திய திரை உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. திரையுலகில் அவர் ஆற்றிய பங்களிப்பும், ஏழைகளுக்கு அவர் செய்த நல்ல விஷயங்களும் அவரை ரியல் ஹீரோவாகவே திகழச்செய்தது. புனித் ராஜ்குமாரின் செயலை பாராட்டும் விதமாக கர்நாடக அரசு கர்நாடகா ரத்னா விருது வழங்கி பெருமைப்படுத்தியது.

பெருமை

புனித் ராஜ்குமார் மறைவுக்குப் பிறகு, சாலைக்கு அவரது பெயரை வைக்க வேண்டும் என்று அந்நகர மக்கள் கோரிக்கை வைத்திருந்தனர். இந்த கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக மைசூர் சாலையில் உள்ள நாயண்டஹள்ளி சந்திப்பு மற்றும் பன்னர்கட்டா சாலையில் உள்ள வேகா சிட்டி மால் இடையேயான 12 கி.மீ. தூர சாலைக்கு புனித் ராஜ்குமாரின் பெயரை கர்நாடக அரசு சூட்டியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here