தனக்கு எதிராக பேசுபவர்களை தாக்க எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வேன் என நடிகை கங்கனா ரனாவத் கூறியிருப்பத் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தலைவி நாயகி

2008 ஆம் ஆண்டு வெளியான தாம்தூம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் கங்கனா ரனாவத். மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்க்கை வரலாற்றை படமாக எடுத்த தலைவி படத்தில் ஜெயலலிதா கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். ஏ.எல் விஜய் இயக்கத்தில், தலைவி படத்தில் கங்கனாவுடன் இணைந்து அரவிந்த்சாமி நடித்திருந்தார். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார்.

சர்ச்சை நாயகி

ஹிந்தியில் முன்னணி நடிகையாக இருக்கக்கூடிய கங்கனா நெப்பாடிசம் மட்டுமில்லாமல் பல சர்ச்சையான அரசியல் சார்ந்த கருத்துக்களையும் வெளியிட்டு வருவார். சோசியல் மீடியாக்களில் சர்ச்சை நாயகியாக இருந்து வரும் நடிகை கங்கனா கூறியுள்ள தகவல்கள் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

மிரட்டும் கங்கனா

சில தினங்களுக்கு முன்பு வீட்டு மாடியிலும், கட்டிடத்திலும், பார்க்கிங்கிலும் ஜூம் லென்ஸ் வைத்து தன்னை யாரோ ஃபாலோ செய்வதாக புகார் அளித்தார். ஆனால் “தற்போது என்னை பற்றி கவலைப்படுகிறவர்கள் ஒரு விஷயத்தை புரிந்து கொள்ளுங்கள், நேற்றிரவு முதல் என்னை சுற்றி சந்தேகத்துக்குரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை. யாரும் என்னை பின்தொடரவும் இல்லை. என்னை மன நோயாளி என்று அழைப்பவர்கள் உஷாராக இருங்கள், இல்லையேல் அவர்களை நான் வீடு புகுந்து தாக்குவேன் என்றும், எனக்கு எதிராக பேசுபவர்களை தாக்க நான் எந்த அளவிற்கு வேண்டுமானாலும் செல்வேன்” என்று பதிவிட்டுள்ளார் இந்த பதிவு தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here