படப்பிடிப்பின் போது ஏற்பட்ட காயத்தால் அவதிப்பட்டு வந்த நடிகர் அருண் விஜய் தற்போது கேரளாவில் ஆயுர்வேத சிகிச்சை மெற்கொண்டு வருகிறார்.

போராடி ஜெயித்த நடிகர்

முறை மாப்பிள்ளை என்ற படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் அருண் விஜய், கங்கா கௌரி, அன்புடன், பாண்டவர் பூமி, தவம், வேதா, துணிச்சல், என்னை அறிந்தால், குற்றம் 23, தடம் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். பல வருடங்களாக சினிமா துறையில் தனக்கென ஒரு இடம் பிடிக்க போராடிக் கொண்டிருக்கும் நடிகர்களில் நடிகர் அருண் விஜய்யும் ஒருவர். தனது விடாமுயற்சியால் இன்று தனக்கென தனி இடம் பிடித்து முன்னணி நடிகர்களில் ஒருவராக உள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான யானை, சினம் போன்ற திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது.

படுகாயம்

அருண் விஜய் படம் என்றாலே ஆக்சன் காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. தற்போது ஏ.எல். விஜய் இயக்கத்தில் “அச்சம் என்பது இல்லையே” என்ற படத்தில் நடித்து வருகிறார். முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகி கொண்டு இருக்கும் இந்த படத்தின் ஆக்சன் காட்சிகளில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது தவறி கீழே விழுந்தார் அருண் விஜய். இதனால் காலில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதற்காக பல சிகிச்சைகள் மேற்கொண்டும் சரியாகாத நிலையில், கேரள பாரம்பரிய ஆயுர்வேத சிகிச்சை எடுத்து வருகிறார் அருண் விஜய்.

மீண்டு(ம்) வருவேன்

ஆயுர்வேத சிகிச்சை எடுக்கும் புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்ட நடிகர் அருண் விஜய், இந்த சிகிச்சைக்கு பிறகு நான் நன்றாக உணர்கிறேன் என்றும், விரைவில் படப்பிடிப்பிற்கு திரும்புவேன் என்றும் பதிவிட்டுள்ளார். இவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது. எப்போதும் உடல் ஆரோக்கியத்தின் மீது அதிக அக்கறை கொண்ட நடிகர் அருண் விஜய் தீவிரமாக ஒர்க் அவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்துள்ளார். ஒவ்வொரு படத்தின் போதும் சண்டைக் காட்சியில் நடித்து காயம் பட்டு வரும் அருண் விஜய்க்கு ரசிகர்கள் கமெண்ட் மூலம் அட்வைஸ் செய்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here