சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் பிரபலமான நடிகையான நீலிமா இசை தனது சொந்த ஊரில் வீடு கட்டும் பணியில் இறங்கியுள்ளார்.

மனம் கவர்ந்த நடிகை

கமல்ஹாசன் நடித்த “தேவர் மகன்” திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நீலிமா இசை. பாண்டவர் பூமி, ஆல்பம், விரும்புகிறேன் போன்ற படங்களிலும் குழந்தை நட்சத்திரமாக நடித்திருந்தார். ஒரு பெண்ணின் கதை என்ற சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார் நீலிமா. பின்னர் மெட்டி ஒலி, கோலங்கள் போன்ற சன் டிவி தொடர்களிலும் இவரது நடிப்பு ரசிகர்களால் பாராட்டுகளை பெற்றது. வாணி ராணி, தாமரை, தலையணை பூக்கள், அரண்மனைக்கிளி என்று பல சேனல் தொடர்களிலும் நடித்துள்ளார் நீலிமா. பல்வேறு படங்களிலும் துணை நடிகையாக நடித்திருக்கிறார்.

புது வீடு திட்டம்

திருமணத்துக்குப் பிறகும் தொடர்ந்து நடித்து வரும் நடிகை நீலிமாவுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். குடும்ப வாழ்க்கையில் பிஸியாக இருக்கும் நீலிமா, அடிக்கடி சமூக வலைதளங்களில் தனது புகைப்படங்களையும் குடும்ப புகைப்படங்களையும் வெளியிட்டு ரசிகர்களிடம் ஆக்டிவாக உள்ளார். தற்போது தனது சொந்த ஊரில் வீடு கட்டும் பணிகளை துவங்கியுள்ளார் நடிகை நீலிமா. அதற்காக பூமி பூஜை போடும் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். திண்டுக்கல் மாவட்டம் ஒரத்தநாடு கிராமத்தில் பங்களா கட்ட திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. நீலிமாவின் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here