‘வாழ்க்கையில் நன்றி உணர்வு இருந்தால் போதும்’ என நடிகை சாய் பல்லவி சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளது அவரது ரசிகர்களை குழப்பமடையைச் செய்துள்ளது.

மலர் டீச்சர்

பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சராக வந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் கைக்குள் போட்டவர் நடிகை சாய் பல்லவி. தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிகளிலும் தற்போது நடித்து வருகிறார். தியா, மாரி 2, என் ஜி கே, கார்கி போன்ற தமிழ் படங்களில் நடித்துள்ளார். தமிழை விட இவர் நடித்த மலையாளம், தெலுங்கு படங்களில் புகழின் உச்சிக்கே சென்றார்.

ஹிட் ஆன ரவுடி பேபி

சாய் பல்லவியின் நடனத்திற்கும், சிரிப்புக்கும் பல ரசிகர்கள் அடிமை. கவர்ச்சியாக நடித்தால் தான் முன்னணி நடிகையாக இருக்க முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கும் பல நடிகைகளுக்கு மத்தியில், திறமை இருந்தால் ஜொலிக்க முடியும் என்று நிரூபித்தவர் தான் சாய் பல்லவி. இவர் நடித்த பல தமிழ் படங்கள் சரியான வரவேற்பை பெறாத நிலையில், தனுஷ் உடன் நடித்த மாரி 2 படத்தின் ரவுடி பேபி பாடல் இன்றும் யூட்யூபில் பல மில்லியங்களை தாண்டி கொண்டிருக்கின்றது.

குழப்பமான பதிவு

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவரது நடனத்தை ரசிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது. எப்பொழுதும் சமூக வலைதளத்தில் அதிகம் பதிவு போடாமல் சைலன்டாகவே இருக்கும் சாய் பல்லவி, சமீபத்தில் போட்ட பதிவு ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. அந்த பதிவில் அவர் “வாழ்க்கையில் புன் சிரிப்பு, ஆசை, நன்றி உணர்வு இருந்தால் போதும்” என்று குறிப்பிட்டுள்ளார். இவர் இப்படி பதிவிட்டு இருந்தது அனைவரையும் குழப்பமடைய செய்துள்ளது. எதனால் சாய் பல்லவி இப்படி ஒரு பதிவு போட்டுள்ளார் என்று ரசிகர்கள் மூளையை கசக்கி யோசித்து கொண்டு இருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here