பிரபல நடிகை சமந்தா தனக்குத் தானே ஆறுதல் கூறி பதிவு வெளியிட்டுள்ளதை கண்ட ரசிகர்கள் அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

நோயால் பாதிப்பு

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக இருப்பவர் நடிகை சமந்தா. கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அதை அவரே தனது சமூகவலைதளம் மூலம் வெளிப்படுத்தினார். அதைக் கேட்ட சினிமா பிரபலங்கள் மற்றும் ரசிகர்களும் இவருக்கு ஆறுதல் கூறி வந்தனர். அதனால் அமெரிக்காவிற்கு சென்று சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் அனைவரும் அறிந்ததே.

தனக்குத்தானே ஆறுதல்

நடிகை சமந்தாவிடம் உடல்நிலை பற்றி கேள்வி கேட்கும் போதெல்லாம் பல மேடைகளிலேயே கண் கலங்கியுள்ளார். இந்நிலையில் ஜனவரி மாதம் எப்படி கடந்தது என்பதை புகைப்படங்கள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார் நடிகை சமந்தா. சொந்த வாழ்க்கையில் பல வேதனைகளையும் கஷ்டங்களையும் தாண்டி வந்த சமந்தா, அதை வெளிப்படுத்தும் விதமாக பதிவை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஆழமாக மூச்சு விடு பாப்பா, கடந்த ஏழு எட்டு மாதங்களாக மோசமாக இருந்தது. அதை எப்பொழுதும் மறக்காதே, எப்படி அந்த கஷ்டத்திலிருந்து வெளியே வந்தாய் என்பதை நினைவில் கொள்.. மற்றவர்களுக்கு முன் ஒரு அடி முன்னால் நடந்தாய்.. உன்னை நினைத்து நான் மிகவும் வெறித்தனமாக பெருமைப்படுகிறேன்.. என்று பல விஷயங்களை தனக்குத்தானே கூறி பெருமைப்பட்டுள்ளார் நடிகை சமந்தா.

ஆறுதல்

சமந்தா நடித்துள்ள ஷாகுந்தலம் திரைப்படம் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. மேலும் ஹாலிவுட் வெப் சீரிஸின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். பல கவலைகளை தாண்டி வெற்றி பெற்று வரும் சமந்தாவிற்கு அவரது ரசிகர்கள் வாழ்த்துக்களையும், ஆறுதல்களையும் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here