பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலுவின் தாயார் சரோஜினி உடல்நலக் குறைவால் நேற்றிரவு காலமானார். அவரது மறைவுக்கு திரையுலகினரும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வடிவேலுவை தொலைபேசியில் தொடர் கொண்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்வருக்கு ஆறுதல் கூறினார். இதனிடையே, தனது தாய் குறித்து நடிகர் வடிவேலு உருக்கமாக பேசியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறியதாவது; எனது தாய் சரோஜினி நேற்று நள்ளிரவு திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவு காரணமாக மறைந்திருக்கிறார். அவர் யாருக்கும் சிரமம் ஏற்படுத்தக் கூடாது என்று பொங்கல் பண்டிகையை நல்லபடியாக ஆடு மாடு என கொண்டாடிவிட்டு தற்போது மறைந்திருக்கிறார். கடைசி வரை யாருக்கும் அவர் எந்த தொந்தரவும் கொடுக்கவில்லை. தானாக நடந்தார், தான் வளர்க்கும் ஆடு மாடுகளையெல்லாம் பிடித்து பொங்கலை கொண்டாடினார். திடீரென மரணமடைந்து விட்டார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here