கேரளாவில் கோவிலுக்குள் நுழைய நடிகை அமலா பாலுக்கு அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னணி நடிகை

நீலதாமரா என்ற மலையாள படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகமானவர் நடிகை அமலா பால். தமிழில் ‘சிந்து சமவெளி’ திரைப்படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான அவர், மைனா திரைப்படத்தின் மூலம் பிரபலமானார். இதன் தொடர்ச்சியாக விஜய், அரவிந்த்சாமி, தனுஷ், ஜெயம்ரவி, விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து பல படங்களில் நடித்தார்.

கல்யாணம் – விவாகரத்து

இயக்குநர் ஏ.எல். விஜய்யை காதலித்து திருமணம் செய்துகொண்ட அமலா பால், பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்றார். அதன்பின் மீண்டும் திரைப்படங்களில் பிசியாக நடிக்கத் தொடங்கினார். ‘ஆடை’ திரைப்படத்தில் நடித்ததன் மூலம் மீண்டும் புகழின் உச்சிக்கு சென்ற அவர், தற்போது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அமலா பால் நடிப்பில் கடாவர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை நடிகை அமலா பாலே தயாரித்திருந்தார். தற்போது மலையாளம், இந்தி என 4 படங்களில் அவர் நடித்து வருகிறார். 

அனுமதி மறுப்பு

இந்த நிலையில், கேரள மாநிலம் எர்ணாகுளத்தில் உள்ள திருவைராணிக்குளம் மகாதேவர் கோவிலுக்குள் செல்ல தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக குற்றம் சாட்டியுள்ளார் நடிகை அமலா பால். மத பாகுபாடு காரணமாக அதிகாரிகள் அனுமதி மறுத்ததாக நடிகை அமலா பால் குற்றம் சாட்டியுள்ளார். கோவிலுக்குள் இந்துக்களை மட்டுமே அனுமதிக்கும் பழக்கவழக்கங்களை மேற்கோள் காட்டி தனக்கு தரிசனம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டதாகவும், கோவிலுக்கு எதிரே உள்ள சாலையில் இருந்து அம்மனை தரிசனம் செய்யும்படி கோவில் நிர்வாகிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாகவும் கூறியுள்ளார். கோவிலின் பார்வையாளர்கள் பதிவேட்டில் அமலா பால் தனது அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். அதில் “அம்மாவைக் காணாவிட்டாலும் அதனை உணர்ந்தேன்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் 2023ஆம் ஆண்டில் கூட மதப் பாகுபாடு இன்னும் நிலவுகிறது என்பது வருத்தமும் ஏமாற்றமும் அளிக்கிறது. என்னால் தேவியின் அருகில் செல்ல முடியவில்லை, ஆனால் தூரத்திலிருந்து அந்த ஸ்பிரிட்டை உணர முடிந்தது. மதப் பாகுபாடுகளில் விரைவில் மாற்றம் வரும் என்று நம்புகிறேன். நேரம் வரும், நாம் அனைவரும் மதத்தின் அடிப்படையில் அல்ல, சமமாக நடத்தப்படுவோம்” என்று அமலா பால் பார்வையாளர் பதிவேட்டில் கூறிப்பிட்டுள்ளார்.

விளக்கம்

ஏற்கனவே உள்ள நெறிமுறைகளை மட்டுமே பின்பற்றுவதாகக் தெரிவித்துள்ள கோவில் நிர்வாகிகள், பிற மதத்தை சேர்ந்த பக்தர்கள் பலர் கோவிலுக்கு வருகை தந்துள்ளதாகவும், ஆனால் அது யாருக்கும் தெரியாது எனவும் கூறியுள்ளனர். இதுவே ஒரு பிரபலம் வந்தால் அது சர்ச்சையாகி விடுகிறது என்றும் அவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here