நடிகர் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த். கடந்த 2004-ம் ஆண்டு நடிகர் தனுஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு யாத்ரா, லிங்கா என இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களது திருமண பந்தத்தில் திடீரென விரிசல் ஏற்பட்டதையடுத்து, கடந்த ஆண்டு இருவரும் பிரிந்தனர். சமூக வலைதள பக்கங்கள் மூலம் தங்களின் திருமண பந்தத்தை முறித்துக்கொள்வதாக அவர்கள் அறிவித்தனர். கணவரை பிரிந்த பிறகு பெற்றோருடன் வசித்து வருகிறார் ஐஸ்வர்யா. இந்நிலையில் தனது பெற்றோர் வீட்டில் பொங்கல் பண்டிகையை கோலாகலமாக கொண்டாடிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த், அதுதொடர்பான புகைப்படங்களையும் சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்துள்ளார். அதில் சமையலறையில் நின்று கேஸ் அடுப்பில் பொங்கல் வைக்கும் ஐஸ்வர்யா, வாசலில் மாடுகளுக்கு உணவும் அளித்துள்ளார். பின்னர் அவரது மகன்களுடன் சேர்ந்து தனது அப்பா அம்மாவான ரஜினிகாந்த் மற்றும் லதா ரஜினிகாந்தின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here