நடிகர் அஜித், மஞ்சு வாரியர் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘துணிவு’. வங்கிக் கொள்ளையை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்தப் படம், நாளைய (ஜன.,11) தினம் சர்வதேச அளவில் திரையரங்குகளில் ரிலீசாகவுள்ளது. ‘துணிவு’ படத்தின் டிரைலர் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், அதிகமான பார்வையாளர்கள் மற்றும் லைக்ஸ்களை பெற்றது. இதனிடையே அப்படத்தில் முக்கியமான கேரக்டரில் நடித்துள்ள நடிகர் சமுத்திரக்கனி பேசியதாவது; ‘துணிவு’ படத்தில் தேவையில்லாத காட்சிகள் என்பதே இல்லை. அஜித் தன்னை புகழும் வகையிலான காட்சிகளை விரும்ப மாட்டார். அதனால் படத்திற்கு தேவையான காட்சிகளை மட்டுமே ஹெச்.வினோத் எடுத்துள்ளார் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here