தனது படங்கள் தொடர்ந்து வெற்றி கண்டு வருவதால் நடிகை அனுபமா பரமேஸ்வரன் சம்பளத்தை உயர்த்திவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னணி கதாநாயகி

மலையாளத்தில் கடந்த 2015-ம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற திரைப்படம் ”பிரேமம்”. இப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமான நடிகை அனுபாமா பரமேஸ்வரன், தொடர்ந்து தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். குறிப்பாக தெலுங்கு திரைப்படங்களில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் தெலுங்கில் அனுபமா நடிப்பில் வெளியான ’18 பேஜஸ்’ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

சம்பளம் உயர்வு?

இந்நிலையில், நடிகை அனுபமா தனது சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக கூறப்படுகிறது. ரூ.60 லட்சம் சம்பளமாக வாங்கிய அவர், தனது படங்களின் தொடர் வெற்றியால் ரூ.1 கோடியே 20 லட்சம் கேட்பதாகவும் இந்த தொகையை கொடுப்பதற்கு தயாரிப்பாளர்கள் சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here