பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட் கடந்த 2020-ம் ஆண்டு ஜூன் மாதம் தனது அடுக்குமாடி குடியிருப்பில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் மரணத்தில் பல்வேறு சந்தேகங்கள் இருப்பதாகவும், போதைப்பொருள் கும்பலுக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் பரவின. இதையடுத்து மும்பை போலீசார் நடத்திவந்த இந்த விசாரணை, சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. அமலாக்கத்துறை, மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு ஆகியவையும் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் மரண வழக்கை பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், சுஷாந்த் சிங் மரணம் குறித்து அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அவரின் உடலை பிரேத பரிசோதனை செய்த ரூப்குமார் என்பவர், சுஷாந்த் தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவர் கொலை செய்யப்பட்டதாகவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here