‘எங்கேயும் எப்போதும்’ படத்தின் இயக்குநர் எம்.சரவணன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ராங்கி’. திரிஷா கதையின் நாயகியாக நடித்துள்ள இப்படம் வருகிற டிசம்பர் 30-ம் தேதி ரிலீசாக உள்ளது. தற்போது ‘ராங்கி’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் திரிஷா, அதற்காக அளிக்கும் பேட்டிகளில் தன்னைப்பற்றிய சர்ச்சைகள் குறித்தும் மனம் திறந்து பேசி உள்ளார். நடிகை திரிஷா கூறியதாவது; “நான் அரசியலில் நுழையப்போவதாக வந்த தகவல் துளியும் உண்மையில்லை. எனக்கும் அரசியலுக்கு எந்தவித சம்மந்தமும் இல்லை. அதேபோல் எப்போது திருமணம் என்கிற கேள்வியை என்னிடம் யாரும் கேட்கக்கூடாது என்பதை நான் விரும்புகிறேன்”. இவ்வாறு திரிஷா கூறி உள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here